#தூத்துக்குடி | 24 வயது இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய 22 வயது வாலிபர்...! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருபவர் 24 வயது இளம் பெண். இவருக்கும், விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த அருண்குமார் (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருண்குமார் இளம்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் அந்த இளம்பெண் மூன்று மாத கர்ப்பிணியானார். இதையடுத்து இளம்பெண் அருண்குமாரிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால் அதற்கு அருண்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து இளம்பெண், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அருண்குமாரை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

22 year old youth arrested for pregnanting a 24 year old girl in Thoothukudi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->