அரசு பேருந்து மீது மின்சாரம் பாய்ந்து அரசு ஓட்டுநர் உட்பட 2 பேர் பலி.!!
2 person died when electric shock in govt bus in nilagiri
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மளவன் சேரம்பாடி பகுதியில் அரசு பேருந்து மீது டிரான்ஸ்பார்மரில் இருந்த மின்சாரம் கம்பி உரசி மின்சாரம் பாய்ந்ததில் ஓட்டுநர் உட்பட இரண்டு பேர் உயிர் இழந்துள்ளனர். கூடலூரில் இருந்து அய்யன்கோள்ளி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து சாலை ஓரம் இருந்த மின்சார ட்ரான்ஸ்ஃபார்ம் மீது மோதியதி மின் கம்பியின் மீது உரசியுள்ளது.
இதனால் பேருந்தில் மின்சாரம் பாய்ந்ததால் ஓட்டுநர் நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இருவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
2 person died when electric shock in govt bus in nilagiri