கோவை : ஈரான் நாட்டுப் பெண்ணை மது குடிக்க வைத்து இளைஞர்கள் செய்த செயல்.. 2 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


கோவையில் ஈரம் நாட்டு பெண்ணை மதிக்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 2 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரான் நாட்டை சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் பி.பார்ம் பிசியோதெரபி முடித்துவிட்டு மும்பையில் வேலை பார்த்து வந்துள்ளார். இதில் கோவை தெலுங்கு பாளையத்தை சேர்ந்த பெண் ஒருவரின் அறிமுகம் அவருக்கு ஏற்பட்டது.

அந்தப் பெண் கோவையில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்துள்ளார். இதனை நம்பி ஈரான் பெண் கடந்து சில நாட்களும் முன்பு கோவைக்கு வந்தார். கோவையில் உள்ள மருத்துவமனையில் வேலைக்கு சேர முயற்சி செய்து வந்தார். அப்போது அந்த பெண்ணுக்கு நியூசித்தாபுதூரை சேர்ந்த ராஜு என்பவருடன் அறிமுகமானார். இதில் 2 பெரும் நண்பர்களாக பழகி உள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று ராஜு ஈரான் பெண்ணை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு இரவு கிளம்பிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரது நண்பர் முன்னுரை சேர்ந்த ஜோன் பிரான்சிஸ் என்பவரும் இருந்துள்ளார். அப்போது ராஜு, பிரான்சிஸ் இருவரும் மது குடித்தனர். போதை அதிகமானதால் ஈரான் பெண்ணை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்துள்ளனர் ஆனால் அவர் மறுத்துள்ளார்.

அதன் பின்னர் அவர்கள் போதையில் ஈரான் நாட்டு பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்ய தவறாக முயன்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அவர்களின் இருந்து தப்பி சென்றார்.

இதனையடுத்து உடனடியாக அந்த பெண் போலீஸில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஈரான் பெண்ணிடம் அத்துமீறிய ராஜூ மற்றும் பிரான்சிஸ் ஆகிய கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 boys harassment to Iran girl in Covai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->