திட்டக்குடி அருகே வேன் கவிழ்ந்து விபத்து - 19 பேர் காயம்
19 injured in van overturned in tittakudi near Cuddalore
கடலூர் மாவட்டத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 19 பேர் காயமடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் கீழ்ச்செருவாய் பகுதியை சேர்ந்த 19 பேர் மாலை அணிவித்து மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்று நேற்று சாமி தரிசனம் முடித்துவிட்டு வேனில் சொந்த ஊர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது திட்டக்கூடிய அடுத்த தி.இளமங்கலம் அருகே வேன் வந்தபோது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 19 பேர் காயமடைந்துள்ளனர். இதை அடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதில் 5 பெண்கள் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
19 injured in van overturned in tittakudi near Cuddalore