திருச்சி விமான நிலையம்: ரூ.16 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 16 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் போதை பொருள் மற்றும் தங்கம் கடத்திவரப்படுவதை தடுப்பதற்காக சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்பொழுது சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு பயணியிடம் சோதனை செய்ததில், அவர் பேஸ்ட் வடிவிலான தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் திருச்சியை சேர்ந்த லோகநாதன் என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த ரூபாய் பதினாறு லட்சம் மதிப்பிலான 292 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் மேலும் இந்த தங்கம் கடத்தல் சம்பந்தமாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

16 lakhs worth gold seized in Trichy airport


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->