#BREAKING : சிதம்பரத்தில் 144 தடை உத்தரவு வாபஸ்- கோட்டாட்சியர் அறிவிப்பு.!
144 ban on Chidambaram withdrawn Govt announces
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கனகசபையின் மீது ஏறி சாமி தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த சில நாட்களாக பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அதன் காரணமாக சிதம்பரத்தில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது.
இந்நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்வதாக காவல்துறையினர் பொறுப்பேற்றதை அடுத்து, பொதுமக்களின் நலன் கருதி 144 தடை உத்தரவு நீக்கப்படுவதாக கோட்டாட்சியர் ரவி அறிவித்துள்ளார்.
English Summary
144 ban on Chidambaram withdrawn Govt announces