தமிழகத்தில் 14 இடங்களில் சதமடித்த வெயில்...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. மேலும் மூன்று நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் 14 இடங்களில் நேற்று 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.

இதில் அதிகபட்சமாக வேலூர் 107.24 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும் சென்னை மீனம்பாக்கத்தில் 101.12 டிகிரி, ஈரோடு 101.84 டிகிரி, கரூர் 106.7 டிகிரி, மதுரை நகரம் 102.2 டிகிரி, பாளையங்கோட்டை 101.3 டிகிரி, சேலம் 101.48 டிகிரி, மதுரை விமான நிலையம் 102.2 டிகிரி, நாகப்பட்டினம் 100.4 டிகிரி, நாமக்கல் 100.4 டிகிரி, தஞ்சாவூர் 100.4 டிகிரி, திருப்பத்தூர் 102.56 டிகிரி, திருச்சி 102.38 டிகிரி மற்றும் திருத்தணியில் 103.28 டிகிரி என 14 இடங்களில் நேற்று வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

14 places in Tamil Nadu recorded temperatures exceeding 100 degrees


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->