11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு.. சக மாணவன் போக்சோவில் வழக்குப்பதிவு.! - Seithipunal
Seithipunal


11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சக மாணவன் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடப்பாண்டுக்கான வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் காரைக்காலில் உள்ள தனியார் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

அங்கு 11ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் சக மாணவர் காதலிப்பதாக கூறி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இந்த விவகாரம் குழந்தைகள் நலக்குழுவுக்கு சென்றது. இதுகுறித்து மாணவியிடம் விசாரித்த குழந்தைகள் நலக்குழுவினர் உடனடியாக சம்பந்தப்பட்ட மாணவன் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு பரிந்துரைத்துள்ளனர்.

இதனையடுத்து 11ம் வகுப்பு மாணவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காரைக்கால் போலீசார் அவரை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11th std harassment to school girl in Puducherry


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->