வீட்டுப்பாடத்திற்கு பயந்து 10-ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


வீட்டுப்பாடத்திற்கு பயந்து 10-ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு.!

சேலம் மாவட்டத்தில் உள்ள மரவனேரியில் பிரபுநகர் பகுதியை சேர்ந்தவர் மதன் கிருஷ்ணன் மகன் சாரதி. தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வரும் இவருக்கு வகுப்பு ஆசிரியர்கள் அதிக அளவில் வீட்டுப்பாடம் கொடுத்துள்ளனர். 

இதனை சாரதி சரியாக எழுதாததால் ஆசியர்கள் கண்டித்துள்ளனர். இதையடுத்து சாரதி பள்ளிக்கு செல்ல மனமில்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இது தொடர்பாக அவரது பெற்றோர் 10-ம் வகுப்பு படித்து முடிக்கும் வரை சற்று கஷ்டமாகதான் இருக்கும் என்றும் பள்ளிக்கு செல்லுமாறும் தெரிவித்துள்ளனர். 

இதனால் மனம் உடைந்த சாரதி நேற்றிரவு வீட்டில் தூங்க சென்றார். இதைத்தொடர்ந்து அவரது பெற்றோர் வீட்டின் கதவை தட்டிய நிலையில் கதவை திறக்காததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். 

அப்போது சாரதி மின் விசிறிக்காக அமைக்கப்பட்ட கொக்கியில் தூக்கு போட்டு உயிரிழந்த நிலையில் தொங்கியுள்ளார். இதைபார்த்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். 

இருப்பினும் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதைத்தொடர்ந்து அவரது உடல் அரசு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10th class student sucide in salem


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->