கன்னியாகுமரி | ரயில் முன் பாய்ந்து 10ஆம் வகுப்பு மாணவி திடீர் தற்கொலை - போலீசார் தீவிர விசாரணை - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில் முன் பாய்ந்து பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் பெயிண்டர் சுரேஷ். இவர் தற்பொழுது குடும்பத்தினருடன் களியக்காவிளை அருகே உள்ள தையாலுமூடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு பென் என்ற மகனும், ஈவிலின் ஜாய் (16) மகளும் உள்ளனர். இதில் பென் 12 ஆம் வகுப்பும், ஈவ்லின் ஜாய் 10ம் வகுப்பும் மத்தபாலையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை ஈவ்லின் ஜாய் ஸ்பெஷல் வகுப்பு உள்ளதாக கூறிவிட்டு பள்ளிக்கு சென்றுள்ளார். ஆனால் பென், சகோதரியை பார்ப்பதற்காக வகுப்புக்கு சென்றபோது ஈவிலின் ஜாய் பள்ளிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது. மேலும் பள்ளி நிர்வாகத்திற்கு ரயில்வே போலீசார் தொடர்பு கொண்டு, பள்ளி சீருடையில் மாணவி ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது தற்கொலை செய்து கொண்டது ஈவிலின் ஜாய் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10th class girl committed suicide by jumping in front of a train in kanniyakumari


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->