10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. கிழட்டு காமுகன் கைது..! - Seithipunal
Seithipunal


8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியில் 10 வயது சிறுவன் ஒருவன் வசித்து வருகிறான். இந்நிலையில் விளையாட சென்று வருவதாக கூறி சென்ற சிறுவன் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவனது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர்.

ஆனால், அவன் எங்கும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிறுவன் கடத்தப்பட்டாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது சிறுவன் அவனியாபுரத்தில் உள்ள வீதியில் நின்று கொண்டிருப்பது காவல் துறைக்கு தெரிய வந்தது.  இதனையடுத்து சிறுவனை மீட்ட காவல்துறையினர் அவரை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

அவனிடம் நடத்திய விசாரணையில் அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த பன்னீர் (56) அவர் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

அடுத்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10-year-old boy sexually harassed


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->