மூன்றாம் தரப்பினரின் அத்துமீறிய தலையீட்டால், அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு இடைநீக்கம். ! - Seithipunal
Seithipunal


சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சம்மேளனம் (பிபா)  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், மூன்றாம் தரப்பினரின் அத்துமீறிய தலையீட்டால் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பை உடனடியாக இடைநீக்கம்  செய்வது என பிபா கவுன்சில் ஒருமித்த முடிவு எடுத்து உள்ளது.

இந்த தலையீடானது, பிபா அமைப்பின் விதிகளை மீறிய தீவிர செயல் என கருதப்படுகிறது என்றும் .  வருகிற அக்டோபர் 11-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையில் இந்தியாவில் நடைபெற திட்டமிடப்பட்ட 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிபா மகளிர் உலக கோப்பை 2022 கால்பந்து போட்டிகள், திட்டமிட்டபடி இந்தியாவில் நடத்தப்பட இயலாது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது . 

பிபா அமைப்பு இப்போட்டி தொடரை  நடத்துவதற்கான அடுத்த வழிமுறைகள் பற்றிய ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றும், எப்போது தேவைப்படுமோ அப்போது, அதுபற்றிய கவுன்சில்  தெரிவிக்கப்படும் என்றும்  தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Suspension All India Football Federation due to intrusive interference by third parties


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->