ஷிகர் தவான் மற்றும் அஸ்வினை கடும் போட்டிக்கு இடையே தட்டி தூக்கிய அணிகள்.!!
shikhar dhawan sold to punjab kings
15வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் இந்தியாவில் தொடங்க உள்ளது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் புதிதாக இணைந்துள்ளது.
10 அணிகளால் மொத்தம் 33 வீரர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 8 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 25 வீரர்களை வைத்துக்கொள்ளலாம். அதன்படி, பார்த்தால் இன்னும் 217 வீரர்கள் தேவைப்படுகின்றனர். இவர்களை தேர்வு செய்ய ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
இந்நிலையில், பெங்களூருவில் 15வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் தொடங்கியது. இன்றைய ஐபிஎல் மெகா ஏலத்தில் 161 வீரர்கள்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
முதல் வீரராக ஷிகர் தவான் ஏலத்தில் விடப்பட்டார். இரண்டு கோடியில் இருந்து ஏலம் கேட்கப்பட்டது. தவானை ஏலம் எடுப்பதில் டெல்லி அணி மற்றும் பஞ்சாப் அணி இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
இவரை தொடர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஏலம் விடப்பட்டார். அஸ்வினை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 7.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
தென்ஆப்பிரிக்கா வீரர் காகிசோ ரபாடா, பஞ்சாப் கிங்ஸ் அணியால் 9.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
நியூசிலாந்து வீரர் டிரென்ட் போல்ட், அணியால் 9.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
English Summary
shikhar dhawan sold to punjab kings