வேகமாக குணமடையும் ரிஷப் பந்த்.. பயிற்சி கேம்பில் அவரே அளித்த பதில்.!
Rishabh pant practice camp
இந்திய கிரிக்கெட் வீரரும் டெல்லி கேப்டனுமான ரிஷப் பந்த் கார் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று தற்போது ஓய்வெடுத்து வருகிறார். அதன் காரணமாக அவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
இதனையடுத்து டெல்லி அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அணியை வழிநடத்துவார் என டெல்லி கேப்பிடல்ஸ் அணி அறிவித்தது.
மேலும், ரிஷப் பந்துக்கு பதிலாக பெங்கால் ரஞ்சி அணிக்காக விளையாடிய அபிஷேக் போரலை டெல்லி அணி நிர்வாகம் விக்கெட் கீப்பராக ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த நிலையில் நேற்று டெல்லி அணி வீரர்களின் பயிற்சி முகாமில் ரிஷப் பந்த் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தற்போது நான் குணமடைந்து வருகிறேன் ஒவ்வொரு நாளும் நான் குணமடைந்து வருகிறேன். நான் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வந்தேன். அங்கு டெல்லி கேப்பிட்டல் அணியினர் இருந்தனர். அப்போது அவர்களை அங்கு சந்தித்தேன். வீரர்களின் பயிற்சி எவ்வாறு உள்ளது என்பதை நான் பார்த்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Rishabh pant practice camp