தேசம் கடந்த நேசம்.. விராட் கோலியின் பிரம்மாண்ட ஓவியத்தை வரைந்த பாகிஸ்தான் ரசிகர்.!
pakisthan fan drawing virat kohli picture
பிரபல கிரிக்கெட் வீரர் கோலி இந்திய அணியின் முக்கிய வீரராக இருக்கிறார். இவர் ஐபிஎல்-இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் தலைவர். இவர் சர்வதேச சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இருக்கின்றார்.
இவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் பணியாற்றி இருக்கின்றார். இவரை ரசிகர்கள் கிங் கோலி என்று அழைப்பார்கள். இவர் கடந்த 2013 முதல் நடிகை அனுஷ்கா சர்மாவுடன் காதலில் இருந்து வருகின்றார்.
இருவரும் காதலித்தபோது கிரிக்கெட் விளையாடும் இடங்களுக்கு காதலி அனுஷ்கா செல்வதை வழக்கமாக கொண்டிருப்பார். இப்படி இருவரும் வெளிப்படையாகவே காதலித்து வந்த நிலையில், கடந்த டிசம்பர் 2017 இருவரும் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர்.
அதன் பின்னர், இவர்களுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. இவரது சமீபத்திய மேட்சில் கோலி சுறுசுறுப்பாக விளையாடி அதிகப்படியான ரன்களை குவித்து வருவது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது.
இத்தகைய சூழலில் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் விராட் கோலி ரசிகர் ஒருவர் கோலியின் பிரம்மாண்ட ஓவியத்தை வரைந்துள்ளார். கோலியின் ரசிகரான கடாணி என்பவர் தான் இந்த ஓவியத்தை வரைந்துள்ளார். இது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
English Summary
pakisthan fan drawing virat kohli picture