இந்திய அணியின் ஒவ்வொரு வீரருக்கும் ஸ்கெட்ச் போட்டு வைத்துள்ள பாகிஸ்தான்!
Pakistan has put a sketch for every player of the Indian team
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த போட்டி மழையினால் பாதிக்கக்கூடும் என பரவலாக பேசப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது "நாளை நடைபெறும் போட்டியின் போது மழை குறுக்கிட்ட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. போட்டி முழுமையாக நடைபெற்றால் நன்றாக இருக்கும். ஆனால் மழையின் காரணமாக குறுகிய வடிவிலான போட்டியாக இருந்தாலும் அதை எதிர்கொள்ள பாகிஸ்தான் தயாராக உள்ளது.
இந்திய அணியை பொருத்தவரை டி20 போட்டிகளில் சூரியகுமார் யாதவ் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்து விளையாடுகிறார். தனது ஆக்ரோஷமான ஆட்டங்களால் பந்துவீச்சாளர்களை மிரட்டுகிறார். எனினும் எங்களிடம் சூரியகுமார் யாதவ் மட்டுமல்ல ஒவ்வொரு இந்திய வீரருக்கும் திட்டம் உள்ளது. அவற்றை நாங்கள் சரியான நேரத்தில் செயல்படுத்துவோம்.
ஆசிய கோப்பை சர்ச்சையில் பிசிசிஐ மற்றும் பிசிபி இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இருதரப்பு வீரர்களும் நல்ல உறவைக் கொண்டுள்ளோம். நாங்கள் இந்திய வீரர்களுடன் ஒரு நல்ல பிணைப்பை புரிந்து கொண்டுள்ளோம். அதைத்தான் தொழில்முறை விளையாட்டு வீரர்கள் செய்கிறார்கள். நாங்கள் அனைவரும் எங்கள் அணிகளுக்கு 100% பங்களிப்பை கொடுத்து விளையாடுவதால் களத்திலும் எங்களுடைய நல்ல உறவுக்கு உதவுகிறது" என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
English Summary
Pakistan has put a sketch for every player of the Indian team