சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுக்க போகும் முக்கிய வீரர்கள் இவர்கள்தான்.? - Seithipunal
Seithipunal


15வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் இந்தியாவில் தொடங்க உள்ளது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் புதிதாக இணைந்துள்ளது. 10 அணிகளால் மொத்தம் 33 வீரர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 8 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 25 வீரர்களை வைத்துக்கொள்ளலாம். அதன்படி பார்த்தால் இன்னும் 217 வீரர்கள் தேவைப்படுகின்றனர். இவர்களை தேர்வு செய்ய ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. 

ஐபிஎல் போட்டியில் 370 இந்திய வீரர்களும், 220 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 590 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 229 வீரர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்கள். வெளி நாட்டைப் பொருத்தவரை அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த - 47 வீரர்கள், வெஸ்ட் இண்டீஸ் - 34 வீரர்கள், தென் ஆப்பிரிக்கா-33 வீரர்கள், இங்கிலாந்தில் - 24 வீரர்கள், நியூசிலாந்து - 24 வீரர்கள், இலங்கை 23 வீரர்கள் இந்த ஏலம் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 

இன்று 161 வீரர்கள் ஏலம் விடப்படுவார்கள். ஏலத்தை இங்கிலாந்தை சோ்ந்த ஹியூக் எட்மீட்ஸ் நடத்துகிறார். பகல் 12 மணிக்கு தொடங்கும்  ஏலம் நிகழ்ச்சியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

இந்நிலையில், தீபக் சாஹரை வாங்க சென்னை அணி முழு முயற்சி எடுக்கும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் கண்டித்துள்ளார். மேலும்,  ஃபாஃப் டு பிளெசிஸ், அம்பாதி ராயுடு, ராபின் உத்தப்பா, ஷாருக்கான், ஜேசன் ஹோல்டர் ஆகியோரை ஏலத்தில் எடுக்க வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL Auction 2022 CSK paln


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->