நாளை இந்தியா - ஆஸ்திரேலியா கடைசி டெஸ்ட் போட்டி.. டாஸ் போட்டு தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி.? - Seithipunal
Seithipunal


இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 2 போட்டிகளிலும், ஆஸ்திரேலியா அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி நாளை (மார்ச் 9ம் தேதி) அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இருநாட்டு பிரதமர்கள் பங்கேற்பு

இந்த நிலையில்  இந்தியா - ஆஸ்திரேலியா அணிக்களுக்கு இடையேயான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இந்திய பிரதமர் மோடியும் - ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ்வும் நேரில் காண உள்ளதால் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாஸ் போடும் பிரதமர் மோடி

இந்த நிலையில் நாளை தொடங்க புள்ள கடைசி போட்டியை இந்திய பிரதமர் மோடி டாஸ் போட்டு தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி

ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு ஏற்கனேவே, ஆஸ்திரேலியா அணி முன்னேறியுள்ள நிலையில், இந்திய அணி தகுதிபெற நாளை தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் கட்டாய வெற்றி பெற வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs AUS 4th test match PM Modi spin the toss


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->