இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று தொடக்கம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி, சவுத்தாம்ப்டன் ரோஸ் பவுல் மைதானத்தில் இன்று இரவு 10 மணிக்கு தொடங்குகிறது. 

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி கடந்தாண்டு ஒத்திவைக்கப்பட்ட கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. அதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபாரமாக வெற்றி பெற்றது. இதனால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. 

இதையடுத்து இந்திய அணி  மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. டி20 தொடரின் முதல் போட்டி இன்று தொடங்குகிறது. சில நாட்களுக்கு முன்பு அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டி போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை கைப்பற்றியது. 

இந்த தொடரில் விளையாடிய வீரர்கள் இந்த தொடரிலும் விளையாட உள்ளனர். மேலும், கொரோனாவில் இருந்து மீண்ட கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி உள்ளது கூடுதல் பலமாக கருதப்படுகிறது. 

இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்ட இயான் மோர்கன்  ஓய்வுக்கு பிறகு, ஜோஸ் பட்லர்  தலைமையிலான இங்கிலாந்து அணி முதல் முறையாக களமிறங்க உள்ளது. இங்கிலாந்து அணி சொந்த மன்னியில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eng vs ind 1st t20 match today


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->