இந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டி.. இந்தியா அபார பந்துவீச்சு.. வங்கதேசம் தடுமாற்றம் .! - Seithipunal
Seithipunal


இந்திய அணிக்கு எதிரான  முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 133 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதல் முதலில் நடைபெற்ற 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வங்கதேசம் தொடரை கைப்பற்றியுள்ளது. அதனைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது.

அதன்படி, இந்தியா வங்காளதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று (டிசம்பர் 14- 18) காலை 9 மணிக்கு  சட்டகிராம் மைதானத்தில்  நடைபெறநடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார்.

இதில், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ள நிலையில் கே.எல்.ராகுல் கேப்டனாக பொறுப்பேற்கிறார். மேலும், ரோஹித் சர்மாவுக்கு அவருக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த போட்டியில் இந்திய அணி அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ் என 3 ஸ்பின்னர்கள் மற்றும் உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆகிய 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குகியது.

அதன்படி, பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே கில், ராகுல், விராட் கோலி என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 48 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதன்பிறகு களமிறங்கிய ரிஷப் பந்த் வழக்கம்போல அதிரடியாக விளையாட இந்திய அணியின் ரன் வேகமாக உயர்ந்தது. 45 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த ரிஷப் பந்த் பேட்டில் பட்டு போல்டானார்.

அதன் பிறகு களமிறங்கிய ஸ்ரேயாஸ் புஜாரா உடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். இதன் மூலம் இந்திய அணியின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 149 ரன்கள் சேர்த்த நிலையில், புஜாரா 90 ரன்களுக்கு அவுட்டானார்.

நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்தது. ஷ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

அதனைத் தொடர்ந்து இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் வந்த வேகத்தில் 86 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டனார்.

அதன்பிறகு ஜோடி சேர்ந்த அஸ்வின் - குல்தீப் சிறப்பாக விளையாடினர். இதன்மூலம் இந்திய அணியின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. இதனையடுத்து ரவிச்சந்திரன் அஸ்வின் 58 ரன்களும், குல்தீப் யாதவ் 40 ரன்களும் எடுத்திருந்த நிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியாக இந்திய அணி முதல் இன்னிங்சில் 10 விக்கெட் இழப்பிற்கு 404 ரன்கள் குவித்துள்ளது. 

அதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த வங்கதேச அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்த நிலையில் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 2 விக்கெட் மட்டுமே கைவசம் உள்ள நிலையில் வங்கதேச அணி 271 ரன்கள் பின் தங்கியுள்ளது.

இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 4 விக்கெட்களும், முகமது சிராஜ் 3 விக்கெட்களும் வீழ்த்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bangladesh 132 runs of day 2 against India


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->