ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா - பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு.! - Seithipunal
Seithipunal


ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியின் போது பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசியின் போது சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி உற்சவம், கடந்த 3 -ஆம் தேதி இரவு 7:00 மணிக்கு, திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து மறு நாள், 4ம் தேதி முதல், உற்சவ நாட்களில், ரங்கநாத பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். வரும் 14 -ஆம் தேதி, ராப்பத்து உற்சவத்தில் முதல் நாளான வைகுண்ட ஏகாதசி திருநாளில், சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 3:30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4:45 மணி அளவில் பரமபதவாசல் திறக்கப்பட்டு, அவ்வழியாக முறைப்படியான சம்பிரதாயங்களை கடந்து, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருள்வார்.

சொர்க்கவாசல் திறப்பு நாளான வரும் 14-ஆம் தேதியன்று, ஒரே நாளில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியின் போது பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதை அடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளன. அதனால் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, ரெங்கா ரெங்கா கோபுரம் வழியாக காலை 7:00 மணி முதல், 9:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

காய்ச்சல், இருமல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் இல்லாத பக்தர்கள், முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளி பின்பற்றியும் மட்டுமே சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே போல், பரமபதவாசல் திறப்பின் போது, பெருமாளுடன் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை, என்றும் கூறப்படுகிறது.

டிசம்பர் 24 -ஆம் தேதி, நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவடையும் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நிறைவடைய இருக்கிறது. வரும் 14 -ஆம் தேதி, சொர்க்க வாசல் திறப்பு நடைபெற உள்ளதையடுத்து, மாவட்ட நிர்வாகம் திருச்சியில் உள்ளூர் விடுமுறை அறிவித்திருக்கிறது.

அதன்படி, அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. பள்ளி, கல்லுாரி தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், அவைகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 14ஆம் தேதிக்கு மாற்றாக, டிசம்பர் 18 -ஆம் தேதி, வேலை நாளாக இருக்கும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SRI RANGAM VAIKUNDA YEKATHASI


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->