இஸ்லாமிய புத்தாண்டு 'ஹிஜ்ரி' : நாகூர் ஆண்டவர் தர்காவில் சிறப்பு பிராத்தனை.!
islam new year hijri
இஸ்லாமியர்கள் நபிகள் நாயகம் மக்காவிலிருந்து மதீனாவுக்குப் புறப்பட்டுச் சென்ற நாளை, 'ஹிஜ்ரி' எனப்படும் வருடப் பிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று இரவு மொஹரம் பிறை தெரிந்ததை ஒட்டி, நபிகள் நாயகம் மக்காவிலிருந்து மதீனாவுக்குப் புறப்பட்டுச் சென்ற நாளான இன்று இஸ்லாமியர்கள் 'ஹிஜ்ரி' புத்தாண்டை கொண்டாடினர்.
இதனை தொடர்ந்து இன்று காலை நாகூர் ஆண்டவர் தர்காவில் இஸ்லாமியர்கள் சிறப்பு பிராத்தனை மேற்கொண்டனர். இதில் ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
மேலும், நாகூர் ஆண்டவர் தர்காவில் இந்த புத்தாண்டு எல்லோருக்கும் நலங்களையும், வளங்களையும் வழங்கும் ஆண்டாக அமைய வேண்டும் என்று பிரார்த்திக்கப்பட்டது.