காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.! மரு.ராமதாஸ் வேதனையுடன் வெளியிட்ட இரங்கல்.!
dr ramadoss condolence to dharmapuram adheenam death
தருமபுரம் ஆதீனத்தின் மடாதிபதி 26-வது குருமகா சந்நிதானம் சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாச்சாரியார் வயது மூப்பு சார்ந்த உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
மிகச்சிறந்த மனித நேயரான சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாச்சாரியார் ஆதீனத்தின் சார்பில் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சேவைகளை செய்து வந்தார். தமிழுக்கும் தொண்டாற்றி வந்தார்.
பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ் பண்ணிசை சேவைகளை அறிந்து மகிழ்ச்சி அடைந்தவர்; ஆதரவு தெரிவித்தவர். என் மீது தனிப்பட்ட முறையில் மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தவர். அவரது மறைவு பெரும் இழப்பாகும்.
தருமபுரம் ஆதீனம் சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாச்சாரியார் அவர்களை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என டாக்டர் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
English Summary
dr ramadoss condolence to dharmapuram adheenam death