இளம் பெண்களே.! மனதுக்குப் பிடித்த மணமகன் கிடைக்க ஆடி செவ்வாயில் இதை செய்யுங்கள்.!  - Seithipunal
Seithipunal


ஆடி மாதத்தில் வரும் வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. செவ்வாய்க்கிழமை என்பது செவ்வாய் பகவானுக்கு ஏற்ற நாளாகும். அந்த செவ்வாய்க்கு அதிபதியாக இருக்கும் முருகனை வழிபட இந்த நாள் மிகவும் ஏற்றது.  

ஆடி செவ்வாயில் அவ்வையார் விரதம் :  

தமிழக பெண்கள் பலரும் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகளில் அவ்வையார் விரதம் மேற்கொள்வார்கள். மூத்த சுமங்கலிகளின் வழிகாட்டுதலின் பேரில் கன்னி பெண்கள் இந்த ஔவையார் விரதத்தை கடைபிடிப்பார்கள். 

இந்த அவ்வையார் விரதத்தில் செய்யப்படும் பதார்த்தங்களில் உப்பு சேர்க்கப்பட மாட்டாது. பச்சரிசி மாவில் வெல்லம் சேர்த்து கொழுக்கட்டை செய்வார்கள். அவ்வையார் அம்மனை மனதில் நினைத்து விளக்கேற்றி பூஜை செய்து, தயாரித்து வைத்திருக்கும் பதார்த்தங்களை படைப்பார்கள்.

இதில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். இந்த விரதத்தில் ஆண்களுக்கு அனுமதி கிடையாது. பூஜை செய்து விரதத்தை முடித்து அனைத்து உணவுகளையும் பெண்கள் மட்டுமே சாப்பிடுவார்கள். இந்த உணவுகளை பார்க்கவோ சாப்பிடவோ ஆண்களுக்கு அனுமதி கிடையாது.

இது போன்ற விரதத்தை மேற்கொள்வதால் மனதுக்கு பிடித்த கணவன் கிடைப்பார்கள் என்பது நம்பிக்கை. மேலும், விரைவில் திருமணம் நடக்கவும், குடும்பத்தில் ஒற்றுமை கிடைக்கவும், குழந்தை பாக்கியம் பெறவும் கணவனுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் செய்யும். 

ஆடி மட்டுமல்லாமல் இந்த அவ்வையார் விரதம் தை மற்றும் மாசி மாதங்களில் வரும் செவ்வாய்க்கிழமைகளிலும் மேற்கொள்ளப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aadi sevvai avvaiyar viradham


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->