இன்றைய (30.11.2022) ராசி பலன்கள்.. யாருக்கு சிக்கனம் ? யாருக்கு பாராட்டு?
30.11.2022 Rasipalankal
மேஷம்
உறவினர்கள் மூலம் செலவுகள் அதிகரிக்கும். சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகள் கைகூடும் என்றாலும் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
ரிஷபம்
எல்லா வகைகளிலும் சாதகமான நாள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத பணவரவு கிடைக்க வாய்ப்பு உண்டு. கடவுள் வழிபாடு சிந்தனை அதிகரிக்கும்.
மிதுனம்
உறவினர்களால் சாதகமான சூழல் உருவாகும். குழப்பமான மனநிலை நீங்கும். முயற்சிகள் சாதகமாகும் திடீர் பண வரவும் செலவுகளும் ஏற்படும். பேச்சில் நிதானம் தேவை.
கடகம்
வழக்கமான வேலைகளிலும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். பேசும் பேச்சில் பொறுமை அவசியம். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள் கடவுள் வழிபாடு அவசியம்.
சிம்மம்
குடும்பத்தினர் உங்கள் உறுப்புகளை புரிந்து கொண்டு பகிர்ந்து கொள்வர். பொறுமையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். எதிர்பாராத செலவுகள் ஏற்பட அதிக வாய்ப்புண்டு.
கன்னி
உறவினர்களால் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் வருத்தங்கள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உருவாகும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும்.
துலாம்
எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க சூழல் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைக்கேற்ப புரிந்து கொண்டு நடத்தல் வேண்டும். உறவினர்களுடன் சிறு பிரச்சனைகள் ஏற்படும்.
விருச்சிகம்
ஆரம்பிக்கும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். நீங்கள் கூறும் ஆலோசனைகளை குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வார்கள். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்புகள் உண்டு.
தனுசு
சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மதியத்திற்கு மேல் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
மகரம்
தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவிர்கள். உடன் பிறந்தவர்கள் மூலம் செலவுகள் ஏற்படும். தேவையற்ற விவாதத்தை தவிர்ப்பது நல்லது.
கும்பம்
தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். குடும்பத்தில் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். உறவினர்களால் மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற்படும்.
மீனம்
புதிய முயற்சிகளை மதியத்திற்கு மேல் எடுத்தால் நல்லது. குடும்பத்தினர் உங்கள் முயற்சிக்கு ஆதரவாக இருப்பார்கள் செலவுகள் அதிகரிப்பதால் சிக்கனம் தேவை.