இன்றைய (29.11.2022) ராசிபலன்கள்.. யாருக்கு வெற்றி.? யாருக்கு மகிழ்ச்சி.?
29.11.2022 Rasipalankal
மேஷம்
குடும்பத்தில் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கி அன்பு அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்பட்டாலும், சிலருக்கு நற்செய்திகளும் வந்து சேரும்.
ரிஷபம்
குடும்பத்தில் செலவுகள் ஏற்பட்டாலும் அதனால் மகிழ்ச்சியான சூழலே ஏற்படும். எதிர்பார்த்த காரியங்கள் நினைத்தபடி முடியும். உடல் நலத்தில் மட்டும் கூடுதல் அக்கறை தேவை.
மிதுனம்
மறைமுக தொல்லைகள் ஏற்படும் என்பதால் இன்று நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. நண்பர்களால் சிறு பிரச்சனைகள் ஏற்படும் என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.
கடகம்
நினைத்த காரியங்கள் நிறைவேறும் நாள். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். பண உதவி கிடைத்தாலும் அதற்கு ஏற்ப செலவுகளும் ஏற்படும்.
சிம்மம்
உறவினர்கள் வழியில் சுப நிகழ்ச்சிக்காண பேச்சுவார்த்தை நடைபெறும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக இழுபறிகளில் இருந்த பணம் இன்று கைக்கு வரும்.
கன்னி
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சாதிக்கும் நாளாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். குடும்பத்தினர் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள்.
துலாம்
உறவினர்களிடம் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். இதனால் பொறுமை அவசியம். குடும்பத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது.
விருச்சிகம்
புதிய முயற்சிகள் வெற்றியை தரும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகி மகிழ்ச்சியான சூழல் உருவாகும். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும்.
தனுசு
சாதிக்கும் நாளாக அமையும். எதிர்பாராத பொருள் வரவுக்கு வாய்ப்பு உண்டு. ஆனால் பேசும்பொழுது பொறுமையை கடைப்பிடிப்பது மிகவும் அவசியமாகும்.
மகரம்
வழக்கமான வேலைகளிலும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். உடல்நலத்தில் அதிக அக்கறை தேவை. பேசும்போது பொறுமை அவசியம்.
கும்பம்
குடும்பத்தினரின் தேவைகளை புரிந்து கொண்டு நிறைவேற்றுவீர்கள் எதிர்பார்த்த உதவி கிடைக்கும் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும் முக்கிய முடிவுகளில் பொறுமை அவசியம்.
மீனம்
எடுத்த காரியம் நினைத்தபடி முடியும். உறவினர்கள் வகையில் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சிகளும் சாதகமாக அமையும்.