இன்றைய நாள் உங்களுக்கு எப்படி அமையப் போகிறது.. இன்றைய (23-10-2022) ராசி பலன்கள்.! - Seithipunal
Seithipunal


மேஷம்

செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். இலக்கியம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதுமையான சூழல் அமையும். உயர் அதிகாரிகளிடத்தில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். முயற்சிகள் ஈடேறும் நாள்.

ரிஷபம்

உறவினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். மனை சார்ந்த பணிகளில் லாபகரமான சூழல் அமையும். சஞ்சலமான சிந்தனைகளால் செயல்பாடுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் பணி நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். போட்டி சார்ந்த விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். கனிவு வேண்டிய நாள்.

மிதுனம்

வாகன பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். தாயின் உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். வாசனை திரவியம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.

கடகம்

உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். தகவல் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முதலீடுகள் மேம்படும். கவலைகள் குறையும் நாள்.

சிம்மம்

பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். நண்பர்களின் வழியில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். உணவு தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் சிறு தொழில் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். நன்மை நிறைந்த நாள்.

கன்னி

குடும்பத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எண்ணிய சில பணிகள் நிறைவுபெறுவதில் காலதாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்படவும். வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். பேச்சுக்களில் பொறுமையும், நிதானமும் வேண்டும். வரவு மேம்படும் நாள்.

துலாம்

எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். சமூக பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். ஆக்கம் நிறைந்த நாள்.

விருச்சிகம்

முக்கிய பிரச்சனைகளில் உறவினர்களை கலந்தாலோசித்து முடிவு எடுக்கவும். அரசு சார்ந்த விஷயங்களில் புரிதல் உண்டாகும். சூழ்நிலைக்கு ஏற்ப சாதுர்யமாக பேசுவதன் மூலம் நன்மை ஏற்படும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உத்தியோக பணிகளில் உங்களுக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும். அறிமுகம் கிடைக்கும் நாள்.

தனுசு

வியாபார பணிகளில் ஏற்பட்ட சிறு சிறு மாற்றத்தின் மூலம் பொருட்சேர்க்கை உண்டாகும். வாழ்க்கை துணைவரின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். மாற்றம் நிறைந்த நாள்.

மகரம்

மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மகான்களின் ஆசிகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதை உறுத்தி வந்த  சில பிரச்சனைகள் குறையும். உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் மேம்படும். அன்பு நிறைந்த நாள்.

கும்பம்

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். சில வேலைகள் முடிவதில் காலதாமதம் ஏற்படும். நண்பர்களை பற்றிய புரிதல் உண்டாகும். வெளியூர் சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத திடீர் செலவுகளால் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் விவாதங்களை தவிர்க்கவும். கவனம் வேண்டிய நாள்.

மீனம்

உத்தியோக பணிகளில் மாற்றமான சூழல் அமையும். நண்பர்களின் உதவியின் மூலம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வர்த்தகம் சார்ந்த முதலீடுகளால் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வாழ்க்கை துணையுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நன்மை நிறைந்த நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

23.10.2022 Rasipalankal


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->