இன்றைய (20-10-2022) ராசி பலன்கள்.. எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நினைத்த காரியம் நிறைவேற போகிறது.! - Seithipunal
Seithipunal


மேஷம்

பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சாதுர்யமான செயல்பாடுகளின் மூலம் பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். எதிர்ப்புகள் விலகும் நாள்.

ரிஷபம்

மனை சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். உற்பத்தி தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழல் ஏற்படும். தவறிப்போன சில பொருட்களை பற்றிய சிந்தனைகள் உண்டாகும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை குறைத்து கொள்ளவும். தடைகள் குறையும் நாள்.

மிதுனம்

கற்பனை சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிலும் பகுத்தறிந்து செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

கடகம்

பெரியோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பயணங்கள் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.

சிம்மம்

எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் புதிய உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்து கொள்ளவும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். வேகத்தை விட விவேகமான செயல்பாடுகள் நன்மையை ஏற்படுத்தும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

கன்னி

மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். பிறமொழி பேசும் மக்களின் ஆதரவு கிடைக்கும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பதன் மூலம் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.

துலாம்

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். இழுபறியான சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் செல்வாக்கு மேம்படும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். செல்வாக்கு அதிகரிக்கும் நாள்.

விருச்சிகம்

வியாபார பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்து கொள்ளவும். ரகசியமான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். தாய்மாமன் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நிர்வாகம் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். அரசு தொடர்பான உதவி கிடைக்கப் பெறுவீர்கள். நன்மை நிறைந்த நாள்.

தனுசு

சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். சங்கம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதரவு மேம்படும். புத்திக்கூர்மையை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். உணவு சார்ந்த விஷயங்களில் லாபம் மேம்படும். மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்த விஷயங்களில் தெளிவு பிறக்கும். மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். அன்பு நிறைந்த நாள்.

மகரம்

மருத்துவ துறைகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்படவும். வாழ்க்கை துணைவரின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். கற்பிக்கும் பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் ஏற்படும். இளைய சகோதரர்களின் வழியில் ஆதரவு உண்டாகும். தனவரவில் கவனம் வேண்டிய நாள்.

கும்பம்

வழக்கு தொடர்பான விஷயங்களில் உள்ள சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உண்டாகும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். போட்டிகள் நிறைந்த நாள்.

மீனம்

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். கடன் சார்ந்த பிரச்சனைகளை குறைத்து கொள்வதற்கான சூழல் உண்டாகும். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். ஆவணம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் மேம்படும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உத்தியோகத்தில் புதுமையான சூழல் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

20.10.2022 Rasipalankal


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->