இன்றைய (18-10-2022) ராசி பலன்கள்.. இந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் மகிழ்ச்சி நாள்.! - Seithipunal
Seithipunal


மேஷம்

மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் புதுவிதமான உத்வேகத்தை ஏற்படுத்தும். கால்நடைகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வேலையாட்களை பற்றிய புரிதல் மேம்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

ரிஷபம்

அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் குறையும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் புதிய வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். எந்தவொரு காரியத்தையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். சொத்துக்களை விற்பது மற்றும் வாங்குவது தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் கிடைக்கும். விவேகம் வேண்டிய நாள்.

மிதுனம்

மனதில் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பொருளாதாரம் தொடர்பான உதவி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் ஏற்படும். மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் மனதிற்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். நன்மை நிறைந்த நாள்.

கடகம்

நண்பர்களுடன் கலந்துரையாடி மனம் மகிழ்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்களும், மகிழ்ச்சியான தருணங்களும் அமையும். பழைய நினைவுகளின் மூலம் சிறு சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். காப்பீடு சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் சிந்தித்து செயல்படவும். வெற்றி நிறைந்த நாள்.

சிம்மம்

உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத அலைச்சல்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பொறுமையுடன் செயல்படவும். உடனிருப்பவர்களை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். முயற்சிகள் மேம்படும் நாள்.

கன்னி

கல்வி சார்ந்த பணிகளில் நுணுக்கங்களை அறிவீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்கள் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறைந்து புத்துணர்ச்சி பெறுவீர்கள். விவசாயம் சார்ந்த பணிகளில் எதிர்பார்த்திருந்த உதவி கிடைக்கும். வரவு மேம்படும் நாள்.

துலாம்

குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் மற்றும் ஆதரவுகள் கிடைக்கும். தானியம் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மனதில் பூமி விருத்திக்கான சிந்தனைகள் மேம்படும். வாசனை திரவியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு லாபம் ஏற்படும். அரசு சார்ந்த உதவி மற்றும் அதை சார்ந்த தடைகளை அறிந்து கொள்வீர்கள். செல்வாக்கு மேம்படும் நாள்.

விருச்சிகம்

உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாகனம் தொடர்பான விஷயங்களில் மாற்றம் ஏற்படும். சகோதரர்களின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். செய்கின்ற முயற்சிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். எதிர்பாலின மக்களின் மூலம் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். திருப்தி நிறைந்த நாள்.

தனுசு

மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த துறைகளில் கவனத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். சுரங்கம் சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். விவேகமான செயல்பாடுகள் உங்களின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும். போட்டிகள் நிறைந்த நாள்.

மகரம்

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை உண்டாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.

கும்பம்

நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சலும், ஆதாயமும் கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் மற்றும் எண்ணங்கள் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் ஓரளவு குறையும். மனதில் போட்டி தேர்வுகளை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் அமையும். உற்சாகம் நிறைந்த நாள்.

மீனம்

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்து செல்வதால் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கப் பெறுவீர்கள். செய்தொழிலில் சில மாற்றத்தை செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். முன்னேற்றம் நிறைந்த நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

18.10.2022 Rasipalankal


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->