வரலாற்றில் இன்றைய சிறப்பு... அன்பை பரிமாறும் தினம் இன்று..! - Seithipunal
Seithipunal


உலக காதலர் தினம் :

ரோமாபுரியை ஆட்சிபுரிந்த இரண்டாம் கிளாடியஸ் என்ற மன்னர் தனது நாட்டில் வாழும் இளைஞர்கள் காதலிக்கக்கூடாது என தடைவிதித்தார். ஆனால், வாலண்டைன் என்கிற கிறிஸ்துவ பாதிரியார் காதலை ஆதரித்து பலருக்கு காதல் திருமணம் செய்து வைத்தார்.

காதலர்களுக்கு ஆதரவாக இருந்த வாலண்டைனின் தலை ஏறத்தாழ கி.பி.269ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி வெட்டப்பட்டது. அவர் இறந்த தினமே காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

ஜாகிருதீன் பாபர் :

முகலாயப் பேரரசர் ஜாகிருதீன் பாபர் 1483ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி உஸ்பெகிஸ்தானில் (ஆசியாவில் உள்ள) பெர்கானாப் பள்ளத்தாக்கிலுள்ள அண்டிஜான் என்னும் நகரத்தில் பிறந்தார்.

இவரின் ஆட்சிக் காலத்திலேயே நீதித்துறை அமைக்கப்பட்டு குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் ஆரம்பித்தன. இந்தியாவில் முகலாய வம்சத்தை உருவாக்கிய பாபர் 1530ஆம் ஆண்டு மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lovers day 2022


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->