பழனிச்சாமி ஒதுக்கிவிட்டு நாங்கள் அனைவரும் இணையப் போகிறோம்...!! வைத்திலிங்கம் பரபரப்பு பேட்டி..!! யார் அந்த நாங்கள், லிஸ்ட் இதோ...!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவுளருமான வைத்தியலிங்கம் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் என அனைவரும் ஒன்றாக இணையப் போகிறோம் என தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் "எங்கள் தலைவர் அண்ணன் ஓபிஎஸ் அவர்களின் கருத்து ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. இந்த கருத்தை லட்சக்கணக்கான தொண்டர்கள் ஏற்றுக் கொண்டார்கள். கட்சியில் பதவியில் இருப்பவர்கள் மட்டுமே எதிர்க்கிறார்கள்.

இதே நிலை நீடித்தால் எடப்பாடி பழனிச்சாமி ஒதுக்கிவிட்டு நாங்கள் அனைவரும் ஒன்று சேர்வோம். எங்களைப் பொறுத்தவரை பாஜக எங்கள் பிரச்சனையில் தலையிடுவதாக தெரியவில்லை. நாங்கள் விரும்புவது அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும். புரட்சித்தலைவர் எம்ஜிஆர், அம்மையார் ஜெயலலிதா ஆசைப்படி நூறு ஆண்டுகள் அஇஅதிமுக இருக்க வேண்டும், தமிழகத்தை ஆள வேண்டும்.

எங்களுடன் மூத்த நிர்வாகி பண்ருட்டி ராமச்சந்திரன், அமைதியாக இருக்கும் சைதை துரைசாமி, தனிக்கட்சி ஆரம்பித்துள்ள ஏ.சி சண்முகம், சின்னம்மா சசிகலா, டிடிவி தினகரன், அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி, அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் என அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அஇஅதிமுகவின் ஒற்றுமைக்கு பழனிச்சாமி ஒத்துவரவில்லை என்றால் கூடிய விரைவில் தனிமைப்படுத்தப்படுவார். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vaithilingam said OPS Sasikala TTV are all together joining


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->