தமிழகம் வருகிறார் அமைச்சர் ராஜ்நாத் சிங்.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகத்தில் 39 தொகுதிகள், புதுச்சேரி என்று மொத்தம் நாற்பது தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்ய அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில், பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ராஜ்நாத் சிங் வரும் 16ம் தேதி தமிழ்நாடு வருகிறார். பின்னர் கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து ராஜ்நாத் சிங் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

union minister rajnath singh coming in tamilnadu


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->