திமுகவின் "ஆ.ராசா மனநிலை பாதிப்பு".!! - சிகிச்சைக்காக அழைக்கும் சிவசேனா.!! - Seithipunal
Seithipunal


திமுக துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா சமீபத்தில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் இந்தியா ஒரு நாடு கிடையாது. இது துணைகண்டம் என பேசியதோடு மீண்டும் ராமர் மற்றும் மகாபாரதம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். 

இதற்கு திமுக அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆ.ராசாவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. 

அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆனந்த் துபே செய்திகள் சந்திப்பில் "ராவணனும் ராமரை நம்பவில்லை. இறுதியில் ராவணனின் நிலை என்னவென்று தெரியும். கடவுள் இந்த அண்டத்திலும் எங்கள் இதயத்திலும் இருக்கிறார். 

ராமரை பற்றி அறியாத‌ ஒரு முட்டாளுக்கு ஞானம் பிறக்க பிரார்த்திக்கிறேன். ஆ.ராசாவின் கருத்துக்கு இண்டியா கூட்டணி கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது.

ஆ.ராசா போன்றவர்களுக்கு அறிவே இல்லை. அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு நல்ல சிகிச்சை அளிக்க வேண்டும். தமிழகத்தில் நல்ல மருத்துவமனை இல்லையென்றால் மும்பை அல்லது டெல்லிக்கு அழைத்து வரட்டும். திமுக தலைவர் ஸ்டாலின் தனது கட்சி நிர்வாகிகளை கட்டுப்படுத்த வேண்டும்" என காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uddhav party Slams ARaja mentality ill should come to Mumbai for treatment


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->