ஜெயலலிதா இடத்தில் இன்று மோடி இருக்கிறார்.. பரபரப்பை கிளப்பிய முக்கிய புள்ளி.!!
TTV Said today pm Narendra Modi in Jayalalithaa place
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜயசீரனை ஆதரித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் "கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் இந்தியா பெரும் வளர்ச்சி கண்டுள்ளது.
விண்வெளி துறை விளையாட்டு துறையில் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது . கடந்த 60 ஆண்டுகளாக அதள பாதாளத்தில் இருந்த இந்திய பொருளாதாரம் நரேந்திர மோடியின் ஆட்சி காலத்தில் உயர்ந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை மக்கள் அறிந்து வைத்துள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று நம்மோடு இல்லை ஆனால் அவரிடத்தில் நரேந்திர மோடி இருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்ற பிறகு தமிழ்நாட்டுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் பெற்று தருவார்கள். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியில் விவசாயிகள் அரசு ஊழியர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் தேவையான திட்டங்களை வழங்கியது போல இந்த முறையும் தேவையான திட்டங்களை உறுதியாக பெற்றுத் தருவோம்" என பேசி உள்ளார்.
English Summary
TTV Said today pm Narendra Modi in Jayalalithaa place