அனைவருக்கும் பட்டை நாமம் போட போகும் திமுக அரசு.. டிடிவி தினகரன் எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று ஈரோடு மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, திமுக மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை என்றுதான் நினைக்கிறேன். ஊழல் இல்லை என அமைச்சர்கள் தான் நிரூபிக்க வேண்டும். 

எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பதுதான் திராவிட மாடல் என்கிறார்கள். ஆனால் எல்லாருக்கும் பட்டை நாமம் போடுவது தான் திமுக ஆட்சி. விவசாயிகள், தொழிலாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதி எதிர்மறையாக திமுக அரசு செயல்படுகிறது. வாக்குறுதி அளித்துவிட்டு பழைய பென்ஷன் திட்டம் கொண்டுவர முடியாது என அமைச்சர் தற்போது கூறியுள்ளார். 

அதிமுக ஆட்சியின்போது 5 லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்ததாக கூறி ஆட்சியைப் பிடித்தனர். தற்போது 6 லட்சம் கோடி கடன் ஆனபின் கடந்த ஆட்சியை காரணம் காட்டுகின்றனர். பஞ்சு மற்றும் நூல் விலை பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும். 

திமுக ஆட்சிக்கு வந்தால் சமூக விரோதிகள், ரவுடிகளுக்கு துளிர் விட்டுப் போய்விடும். அதேநிலை தான் தற்போது தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது. இது நீடித்தால் திராவிட மாடல் போய், காட்டுமிராண்டி மடல் ஆகிவிடும். அதிமுகவினருக்கு மடியில் கனம் உள்ளதால் திமுக ஆட்சியை விமர்சிக்காமல் உள்ளனர் எனக் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dinakaran press meet for dravidian model


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->