பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக இன்று கண்டன ஆர்ப்பாட்டம்.. சென்னை பத்திரிகையாளர் மன்றம் அறிவிப்பு.!!
today chennai press club protest against annamalai
ஊடகங்களை இழிவுபடுத்தும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் அறிவித்துள்ளது.
சென்னையில் பாஜக தலைமையகம் கமலாலயத்தில் 2 நாட்கள் முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் அப்போது செய்தியாளர் ஒருவர் சென்னைக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதற்கு பாஜக சார்பில் விதிகளை மீறி பேனர்கள் வைத்திருந்தது குறித்து கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த அண்ணாமலை கேள்வி எழுப்பிய செய்தியாளரை பார்த்து உங்களுக்கு 200 ரூபாய் நிச்சயம் உண்டு, அறிவாலயத்தில் வாங்கிக் கொள்ளலாம் என்றார்.
தொடர்ந்து கேள்வியை எழுப்பவே படிப்படியாக ரூபாய் 3 ஆயிரம் வரை வாங்கிக் கொள்ளலாம் என பத்திரிக்கையாளரை அவமதிக்கும் வகையில் பேசியிருந்தார். இதற்கு பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. பலரும் கண்டனத்தை பதிவு செய்தனர்.
இந்நிலையில், ஊடகங்களை இழிவுபடுத்தும் விதமாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஊடகவியாளர் கேள்விகளை எதிர்கொள்ளும் முடியாவிட்டால் அமைதி காக்கலாம். மாறாக ஊடகவியலாளர்கள், தங்களுடைய கடமைகளை செய்ய அறிவாலயத்தில் கையூட்டு பெறுகிறார்கள் என்று கேவலமாக அவதூறு செய்திருப்பதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
இந்த பத்திரிகையாளர் விரோத – அவதூறு போக்கை கண்டித்தும் ,தனது பேச்சை இதுதான் தர்மம் என நியாயப்படுத்தும் அண்ணாமலை, தொடர்ந்து பத்திரிகை இழிவுபடுத்தும் செயலையு,ம் கருத்துரிமைக்கு எதிரான போக்கை கண்டித்தும் இன்று மாலை 4.30 மணி அளவில் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வளாகத்தின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது தெரிவித்துள்ளனர்.
English Summary
today chennai press club protest against annamalai