மோசடி வழக்கில் பாஜக நிர்வாகியும் நடிகையுமான ஜெயலட்சுமி கைது.! - Seithipunal
Seithipunal


சினேகம் அறக்கட்டளை யாருக்கு சொந்தம் என்பதில் கவிஞர் சினேகன் மற்றும் பாஜக நிர்வாகியும் நடிகையுமான ஜெயலட்சுமி இடையே பிரச்சனை எழுந்த நிலையில் இதுகுறித்து சினேகன் அளித்த புகாரின் பேரில் போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக ஜெயலட்சுமியிடம் இன்று காலை போலிசார் விசாரணை நடத்தினர்.

போலியான ஆவணங்கள் தயாரித்து பாடலாசிரியர் சினேகனின் ‘சினேகன் பவுண்டேஷன்’ என்ற பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது தொடர்பான முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். ஜெயலட்சுமி மீது மோசடி, போலியான ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் மோசடி செய்தது அம்பலமான நிலையில் திருமங்கலம் போலீசார் ஜெயலட்சுமி கைது செய்து, வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர்.

விசாரணை முடிவில் மோசடி வழக்கில் பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமியை சென்னை திருமங்கலம் காவல்துறையினர் கைது செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN BJP jayalakshmi arrested in fraud case


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->