முதல்வர் பதவியை விட கோயில் கருவறையில் நுழைவதே பெரிய வெற்றி..!! விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு..!!
Thirumavalavan said entering temple sanctum is bigger success than CM post
திராவிட கழக தலைவர் ஆசிரியர் கீ.வீரமணியின் 90 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன் முதல்வர் பதவியில் அமர்வதை விட கோவில் கருவறையில் நுழைவது பெரிய வெற்றி என பேசி உள்ளார்.
இது குறித்து விழா மேடையில் பேசிய அவர் "கலைஞர் கருணாநிதி காலத்தில் நிறைவேறாத கனவாக இருந்தவற்றை இன்றைய முதல்வர் மு.க ஸ்டாலின் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.
தமிழகத்தில் ஏறத்தாழ 48 ஆயிரம் இந்து கோயில்கள் உள்ளன. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சட்டத்தினால் இந்த 48 ஆயிரம் கோயில்களின் கருவறைக்குள் நுழையும் வாய்ப்பு பார்ப்பனர் அல்லாதவர்களுக்கும் கிடைத்துள்ளது.
பட்டியலின மக்கள் பல்கலைக்கழகங்களில் அடி எடுத்து வைப்பதை விட, துணைவேந்தர் ஆவதை விட, முதல்வர் பதவியில் அமர்வதை விட கோவில் கருவறையில் நுழைவதே 7000 ஆண்டுகால போராட்டத்தின் மிகப்பெரிய வெற்றி" என திருமாவளவன் பேசி உள்ளார்.
English Summary
Thirumavalavan said entering temple sanctum is bigger success than CM post