பரபரப்பு... சிபிஐ எம்பி செல்வராஜுக்கு மூச்சு திணறல்.. அரசு மருத்துவமனையில் அனுமதி..!!
Selvaraj mp admitted to GovtHospital due to breath shortness
நாகை மாவட்டம் நீடாமங்கலம் கப்பலுடையான் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் சிபிஐ மாநில நிர்வாகக் குழு உறுப்பினராகவும், நாகை மாவட்ட சிபிஐ செயலாளராகவும் இருந்து வருகிறார்.இவர் நாகப்பட்டனம் தனி தொகுதியில் 5முறை போட்டியிட்டு 3 முறை எம்.பியாக இருந்த எம்.செல்வராஜ் மீண்டும் அங்கு போட்டியிட்டு கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் 4வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில் நாகப்பட்டினம் தொகுதி எம்பி செல்வராஜ் மூச்சு திணறல் காரணமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தற்போது திருவாரூர் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு செல்வராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Selvaraj mp admitted to GovtHospital due to breath shortness