வேட்பாளரின் பெயர் தெரியாமல் வாக்கு சேகரித்த செல்வ பெருந்தகை.!! - Seithipunal
Seithipunal


தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான செல்வ பெருந்தகை ஸ்ரீவில்லிபுத்தூரில் வாக்கு சேகரித்தார். அப்போது வேட்பாளர் பெயர் தெரியாமல் முழித்த செல்வ பெருந்தகை நீண்ட நேரமாக உதயசூரியன் சின்னத்தை மீண்டும் மீண்டும் கூறி வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்தார். 

இதனை எடுத்து அருகில் இருந்த நபரிடம் திமுக வேட்பாளரின் பெயரை கேட்டு அறிந்த பிறகு அத்தொகுதியில் வேட்பாளர் ராணி ஸ்ரீ குமாரின் பெயரைச் சொல்லி வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை. திமுக வேட்பாளர் பெயரைக் கூடத் தெரியாமல் வாக்கு சேகரிக்க எப்படி வருகிறார்கள் என கூட்டத்தில் இருந்த பொதுமக்கள் விமர்சனம் செய்தனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Selvaperunthagai campaign without knowing candidate name


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->