பள்ளி மாணவர்களுக்கு உப்புமா? சிறைக் கைதிகளுக்கு சிக்கனா? அதிமுக செல்லூர் ராஜு விமர்சனம்.!
Sellur raju roasted DMK
மதுரை மாவட்டம் கோவில் பாப்பாக்குடியில் இலவச கண் சிகிச்சை முகாமை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், சிறையில் உள்ள கைதிகளுக்கு சிக்கன் மட்டன் என சத்தான உணவுகளை வழங்குகின்றனர். ஆனால் பள்ளி மாணவர்களுக்கு கிச்சடி உப்புமா கொடுக்கின்றனர். தமிழகத்தில் திமுக ஆட்சி எப்போது வந்ததோ அப்போதே தமிழகம் இருண்டு போய்விட்டது.
தமிழ்நாட்டிற்கு விடை தருவோம் என்று எப்போது கூறினார்களோ அன்றே முடியாமலேயே போய்விட்டது. திமுக என்ற கரடியிடம் தமிழக மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இதில் பாஜகவுக்கு முதன் முதலில் பல்லக்கு தூக்கியது திமுக தான் என அவர் தெரிவித்துள்ளார்.
அப்போது பாஜகவுக்கு பல்லக்கு தூக்கிய திமுக தற்போது காங்கிரஸுக்கு பல்லக்கு தூக்குகிறது. தற்போதுள்ள ஆட்சியின் மீது அவரது கட்சிக்காரர்கள் திமுக நிறைய அதிப்ருதியில் உள்ளனர். அதற்குக் காரணம் மின் கட்டண உயர்வால் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவை பொறுத்தவரை ஜாதி மதம் பார்ப்பதில்லை அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் சபாநாயகராக பணியாற்றினார். திமுக என்ற எதிரியை வீழ்த்தவே கூட்டணி அமைக்கிறோம் கொள்கையை விட்டுக் கொடுத்து கூட்டணி அமைக்கவில்லை. அதுவும் தேர்தல் நேரத்தில் மட்டுமே கூட்டணி அமைக்கப்படுகிறது. ஒருவருக்கொருவர் எதிர்த்து கொண்டு அமைப்பது கூட்டணியல்ல தற்போது அதிமுக ஒற்றுமையுடன் பயணிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.