ஜெயலலிதா ஊழல்வாதி.. அண்ணாமலையின் கருத்துக்கு சீமான் ஆதரவு.! - Seithipunal
Seithipunal


தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்துக்கு சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணியில் உள்ள நிலையில் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அண்ணாமலை அதிமுக முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா குறித்தும் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்தும் பேசியது பெரும் பரபரப்பையை ஏற்படுத்தியது.

அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுக பிரமுகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் கூட்டணி குறித்தும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில் இன்று செய்திகளை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்த அண்ணமலையின் கருத்துக்கு தெரிவிப்பதாக கூறியுள்ளார். மேலும், ஒருவர் செய்த தீமைகள் அவர் இறந்த பிறகு புனிதமாகி விடாது என தெரிவித்துள்ளார். மேலும் ஜெயலலிதாவும் சசிகலாவும் ஏன் சிறை சென்றார்கள் என கேள்வி எழுப்பினார் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seeman support annamalai speech about Jayalalithaa


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->