சசிகலாவை சிறையில் அடைத்தவர்களுடன் கூட்டணியா? - டிடிவியை விளாசும் சீமான்.!! - Seithipunal
Seithipunal


தேனி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதன் ஜெயபாலை ஆதரித்து கம்பம் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட சீமான் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரச்சார வாகனத்தில் நின்றவாறு பேசிய சீமான் "உங்களை சிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா? 

சசிகலா அவர்களை நான்கரை ஆண்டுகள் சிறையில் வைத்தவர்கள் யார்? சசிகலா ஏற்பதை தடுக்க 22 நாட்கள் தாமதப்படுத்தியது யார்? வழக்கை அவசரமாக விசாரித்து சசிகலாவுக்கு தண்டனை வழங்கியது யார்? 

பதவி பிரமாணம் செய்து வைக்குமாறு கூறியவுடன் அவசரமாக விசாரிக்க சொன்னது யார்? சசிகலா அவர்களின் குடும்பத்தில் நிகழ்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் பாஜக தான் காரணம். சசிகலா, தினகரன் பிரச்சனையில் இருந்தபோது தமிழகத்தில் குரல் கொடுத்த ஒரே ஆள் நான் தான். இரட்டை இலை சின்ன வழக்கில் கைதானவர் இன்னும் சிறையில்தான் உள்ளார். என்னை மிரட்டிப் பார்த்தார்கள் நான் சமரசம் ஆகவில்லை சரணடையவில்லை என டிடிவி தினகரன் பாஜகவுடன் கூட்டணி வைத்ததை சீமான் விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seeman criticized TTVDhinakaran BJP alliance


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->