ராமநாதபுரத்தில் பிரதமருக்கு பதிலாக அவரால் களமிறக்கப்பட்டவர் ஓ.பி.எஸ். - அண்ணாமலை பேச்சு.!!
Ramanathapuram replaced the Prime Minister with O.P.S Annamalai speech
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ளநிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகினறனர்.
அந்தவகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் சூழற்ச்சியாக தனி சின்னத்தில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னிர் செல்வத்தை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அண்ணாமலை பேசுகையில், பிரதமர் மோடியிடம் எப்போது வேண்டுமானாலும் பேசும் செல்வாக்கு பெற்றவர் ஓபிஎஸ். பிரதமர் மோடி எப்போது பேசுவார் என்று உலக தலைவர்களே காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, ராமநாதபுரத்திற்கு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் பல நுறு கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்ததை தனது நேரடி கண்காணிப்பில் வைத்திருக்கிறார் பிரதமர் மோடி பேசினார் அண்ணாமலை.
English Summary
Ramanathapuram replaced the Prime Minister with O.P.S Annamalai speech