மீண்டும் தமிழகம் விரையும் ராகுல் காந்தி: எப்போது தெரியுமா?
Rahul Gandhi again come Tamil Nadu
கேரளா எல்லையில் உள்ள நீலகிரி தாளுருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று செல்ல உள்ளார். அங்குள்ள தனியார் கல்லூரியில் மாணவர்கள், கட்சி நிர்வாகிகளுடன் உரையாடிய பிறகு தாளுரில் உள்ள தேவாலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசுகிறார்.
இதற்கு முன்னதாக ராகுல் காந்தி, மக்களவைத் தேர்தலையொட்டி கடந்த 12ஆம் தேதி பிரசாரத்திற்காக தமிழகம் வந்திருந்தார்.
அப்போது அவர் நெல்லை மற்றும் கோவையில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில் ராகுல் காந்தி 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் இன்று தமிழகம் வர உள்ளார். தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால் அரசியல் தலைவர்கள் இறுதி கட்டப்பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
English Summary
Rahul Gandhi again come Tamil Nadu