இண்டி கூட்டணிக்கு வேட்டு... மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மியும் தனித்து போட்டி.!! - Seithipunal
Seithipunal


பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து அமைத்த இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு சுமுகமாக முடியவில்லை காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை தர திருநாமம் காங்கிரஸ் மறுத்து வந்தது. மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில் தற்போது மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உடனான கொள்கை ரீதியான முரண்பாடு, காங்கிரசுடன் தொகுதி பங்கீடு ஆகியவற்றின் காரணமாக மம்தா பானர்ஜி இத்தகைய முடிவை எடுத்துள்ளர்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சமாதானம் செய்யும் முயற்சியில் காங்கிரஸ் தலைமை ஈடுபட்டு வரும் இந்த சூழலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மேலும் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல் இந்தியா கூட்டணிக்கு கிடைத்துள்ளது. 

எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என அம் மாநில முதலமைச்சர் பகவத் மான் அறிவித்துள்ளார். ஆம் ஆத்மி காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு சமூகமாக நடைபெற்று வரும் இந்த சூழலில் பஞ்சாப் மாநில முதல்வரின் அறிவிப்பு கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Punjab aap contest alone in the Lok Sabha elections


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->