பாமக கொடியை இரவோடு இரவாக கிழித்த விரோதிகள்.. கடலூர் மாவட்டத்தில் பதட்டம்.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அருகே புவனகிரி பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி ஏற்றப்பட்டு இருந்துள்ளது. இந்த கொடி கம்பத்தை நேற்று இரவு சில மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். அதிலிருந்து கொடியை அறுத்து வீசியுள்ளனர். 

இதை காலையில் அப்பகுதியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியினர் கவனித்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்த தகவல் அப்பகுதியில் தீயாய் பரவிய நிலையில் ஏராளமான பாமகவினர் அப்பகுதியில் திரள ஆரம்பித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் : பாமக வேட்பாளர் வெற்றி.! - Seithipunal

இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து புவனகிரி இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்றனர். கிழிக்கப்பட்டிருந்த கட்சி கொடியை அவர்கள் கைப்பற்றினர். 

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொடியை அறுத்து வீசிய மர்ம நபர்கள் யார்? எதற்காக இப்படி செய்தார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk flag damaged at night in puvanagiri


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->