கூட்டணி வேண்டுமென்றால் பாஜக வரட்டும்.. பண்ருட்டி ராமச்சந்திரனின் பரபரப்பு பேச்சு .!!
Panrutti Ramachandran said BJP should come if it wants
ஓபிஎஸ் அணியினரின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை எக்மோர் பாந்தியன் சாலையில் உள்ள அசோகா ஹோட்டலில் இன்று காலை 10:30 மணி அளவில் தொடங்கியது. ஓபிஎஸ் அணையின் ஆளை அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலை எதிர்கொள்வது மற்றும் கொங்கு மண்டலத்தில் நடந்த திட்டமிட்டுள்ள மாநாடு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன் "பாஜகவுடன் தோழர்களாக இருக்கலாம். அதற்காக பாஜகவின் தொண்டர்களாக இருக்க முடியாது. நம்முடன் கூட்டணி வேண்டுமென்றால் அவர்கள் வரட்டும்.
அவர்களின் தயவுக்காக நாம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. பாஜகவை பகைத்துக் கொள்ளவும் தேவையில்லை. நம்மிடம் தொண்டர்கள் பலம் உள்ளது. எதிர் வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் திமுக முதலிடத்தில் இருந்தால் நாம் இரண்டாம் இடத்தில் இருப்போம்" என மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் பேசியுள்ளார்.
English Summary
Panrutti Ramachandran said BJP should come if it wants