ஜனவரி 24 வரை.. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்க.. களத்தில் இறங்கிய ஓபிஎஸ்.!!
OPS campaign across Tamil Nadu from today
பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்று நடந்து முடிந்த நிலையில் கோவையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே அவர் அறிவித்தபடி "அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு ஆலோசனை குழு" பெயரில் ஓபிஎஸ் தலைமையில் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் இந்த கூட்டமானது நடைபெற்றுள்ளது.
ஓபிஎஸ்ன் ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இன்று முதல் தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த சுற்றுப்பயணம் வரும் ஜனவரி மாதம் 24ம் தேதி வரை நடத்த ஓபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
English Summary
OPS campaign across Tamil Nadu from today