பாஜக தலைவரை புகழ்ந்து தள்ளிய நிதிஷ்குமார்.!! இண்டியா கூட்டணியில் வெடித்த அடுத்த சர்ச்சை.!! - Seithipunal
Seithipunal


முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளான இன்று பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் அவரை புகழ்ந்து பேசியுள்ளார் . செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் "வாஜ்பாய் ஒரு சிறந்த தலைவர். அவரது ஆட்சி காலத்தில் நான் மத்திய அமைச்சராக இருந்தேன். அவர் எனக்கு முக்கிய பொறுப்பு கொடுத்து அழகு பார்த்தவர். பீஹார் முதலமைச்சராக நான் பொறுப்பேற்றதில் வாஜ்பாயிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. பாரபட்சம் இன்றி ஆட்சி செய்தார். என் வாழ்நாளில் அவரை மறக்க முடியாது. வாஜ்பாயின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளேன்" என புகழ்ந்து பேசியுள்ளார்.


அப்போது அரசியலில் வாஜ்பாயின் கொள்கையை ஏற்கிறார்களா? என கேள்வி எழுப்ப அதற்கு நிதிஷ்குமார் "வாஜ்பாய் மிக சிறந்த நிர்வாகி. அவர் ஆட்சியில் மல்லல் பல நன்மைகள் பெற்றுள்ளனர். அவருடன் நானும் இணைந்து பல பணிகளை செய்துள்ளேன்" என பதிலளித்தார். சனாதனம் ஆதரவு, எதிர்ப்பு, இந்தி சர்ச்சை என பல விவகாரங்களில் இண்டியா கூட்டணி அடுத்தடுத்த சர்ச்சையில் சிக்கி வரும் இந்த சூழலில் வாஜ்பாய் குறித்து நிதிஷ்குமார் புகழ்ந்து பேசி இருப்பது இண்டியா கூட்டணியில் மீண்டும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nitishkumar broke out next controversy in India alliance


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->